DIR Return Create A Forum - Home
---------------------------------------------------------
POST YOUR MEDICAL TIPS HERE.......
HTML https://medicaltips.createaforum.com
---------------------------------------------------------
*****************************************************
DIR Return to: ஆயுர்வே&#...
*****************************************************
#Post#: 16--------------------------------------------------
ஆரோக்கியத்தை
என்றும்
தரக்கூடியது
ஆயுர்வ
DIR By: A666A777
Date: January 17, 2015, 1:12 am
---------------------------------------------------------
இப்போது
அலோபதி
எனும்
ஆங்கில
மருத்துவ
முறையையே
பெரும்பாலானவர்கள்
பின்பற்றினாலும்,
பின்விளைவு
இல்லாத
நிரந்தர
ஆரோக்கியத்தை
என்றும்
தரக்கூடியது
ஆயுர்வேதம்
மட்டுமே
என்கின்றனர்
ஆயுர்வேத
வைத்தியர்கள்.
ஆமாம்
ஆயுர்வேத
வைத்தியத்தின்
வரலாறு
தெரியுமா?
"வாழ்க்கையின்
விஞ்ஞானம்"
என்பதுதான்
ஆயுர்வேதம்.
கிறிஸ்து
பிறப்பதற்கு
4 ஆயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பே
இந்தியாவில்
ஆயுர்வேத
முறை
பயன்பாட்டில்
இருந்துள்ளது.
மிக நீண்ட
வரலாறு
கொண்ட
ஆயுர்வேதம்
பல்வேறு
நிலைகளில்
பல
மாற்றங்களைக்
கண்டு
வந்துள்ளது.
வேத
காலத்தில்
இந்தியாவில்
சிறந்து
விளங்கிய
ஆயுர்வேதம்
இந்தோனேஷியா,
கிரேக்கம்
போன்ற
நாடுகளுக்கும்
பரவியது.
பிற
நாடுகளில்
இந்திய
ஆயுர்வேதத்தை
ஏற்றுக்
கொண்டவர்கள்,
அதை
தங்களுடைய
தேவைகளுக்குத்
தகுந்தவாறு
மாற்றிக்
கொண்டனர்.
இன்றைய
உயரிய
வசதிகள்
இல்லாத
அந்த
காலக்கட்டத்தில்
ஓலைச்சுவடிகளில்
பெரும்பாலும்
எழுதி
வைக்கப்பட்ட
இந்திய
ஆயுர்வேத
ரகசியங்கள்
கல்வெட்டுகளிலும்
பொறிக்கப்பட்டுள்ளன.
நோய் வரும்
முன்
காப்பதையும்,
நோய் வந்த
பின்
என்னென்ன
சிகிச்சை
முறைகள்
மேற்கொள்ள
வேண்டும்
என்பதையும்
பழங்கால
ஆயுர்வேத
நூல்கள்
அழகாக
தெரிவிக்கின்றன.
நோய்கள்
தோன்றி
மனிதகுலம்
அவதிக்குள்ளாவதைக்
கண்ட
ரிஷிகளும்,
முனிவர்களும்
தீவிரமாக
யோசித்ததன்
விளைவுதான்
ஆயுர்வேதம்
பிறப்பு.
பரத்வாஜர்
என்ற ரிஷி
தேவேந்திரனிடம்
ஆயுர்வேத
முறையைக்
கற்று, அதை
மற்ற
ரிஷிகளுக்கு
கற்பித்தார்.
அவர்கள்
தங்களது
சீடர்களுக்கு
அதை
எடுத்துரைத்தனர்.
ஆயுர்வேதம்
பற்றிய
நூல்களும்
எழுந்தன.
புனர்வசு
ஆத்திரேயர்
என்ற
ரிஷியின்
சீடரான
அக்னி
வேசர்
எழுதிய
அக்னிவேச
சம்ஹிதையே
ஆயுர்வேதத்தின்
முதல்
நூலாகக்
கருதப்படுகிறது.
இந்த
அக்னிவேச
சம்ஹிதையே
"சரக
சம்ஹிதை"
என்று
அழைக்கப்படுகிறது.
ஆயுர்வேத
நூல்களில்
மற்றொரு
மிகச்
சிறந்த
நூலாகத்
திகழ்கிறது,
சுஷ்ருதரால்
இயற்றப்பட்ட
"சஷ்ருத
சம்ஹிதை".
புத்தர்
வாழ்ந்த
காலத்துக்கும்
முற்பட்டவர்
இந்த
சுஷ்ருதர்.
-
இப்படித்தான்
ஆயுர்வேதம்
தோன்றி
வளர்ந்துள்ளது.
இதே
ஆயுர்வேத
முறையை
ஒவ்வொரு
நாட்டிலும்
ஒவ்வொரு
விதத்திலும்
பயன்படுத்தி
வருகின்றனர்.
அப்யங்க
ஸ்வேதனா
மிக
எளிமையான
சிகிச்சை
முறைதான்
இது.
குறிப்பிட்டகால
ஆரம்பக்கட்ட
சிகிச்சைக்குப்
பிறகு
மூலிகை
மருந்து
கலந்த
எண்ணெய்
மற்றும்
நீராவி
குளியலுடன்
மசாஜ்
சிகிச்சை
அளிப்பார்கள்.
இது ரத்த
ஓட்டத்தை
அதிகரிக்கும்,
உடலை
வலுப்படுத்தும்,
உடல்
திசுக்களை
உறுதிப்படுத்தும்,
நல்ல -
ஆழ்ந்த
தூக்கத்தை
வரவழைக்கும்.
பிழிச்சில்
ஒரு
நாளைக்கு
ஒரு மணி
நேரம்
முதல் 2 மணி
நேரம்வரை
உடலில்
இளஞ்சூட்டில்
எண்ணெய்
விட்டு
சிகிச்சை
அளிக்கும்
முறை இது.
எலும்பு
முறிவுகள்,
மூட்டு
பிசகு,
கை-கால்
வலி
மற்றும்
விரைப்புத்தன்மை,
பக்கவாதம்,
ருமாடிக்
காய்ச்சல்,
ருமாய்ட்டோடு
ஆர்த்தரைட்டிஸ்
போன்ற
பிரச்சினைகள்
இந்த
சிகிச்சையால்
விலகும்.
தாரா
ஒரு
குறிப்பிட்ட
மூலிகை
எண்ணெய்,
மருந்து
கலந்த பாலை
தினமும் 45
நிமிடங்கள்
முன்
நெற்றியில்
விசேஷமான
முறையில்
ஊற்றி
சிகிச்சை
அளிக்கும்
முறையே
இது. உடல்,
மனம்
சமநிலை
பெறுவதில்
இந்த
சிகிச்சை
மிகவும்
உதவுகிறது.
உடல்
பலமும்,
நினைவு
திறனும்
அதிகரிக்கிறது.
அத்துடன்
குரல் வளம்
தெளிவாகிறது.
கண்
நோய்கள்
தீருதல்,
தலைவலியில்
இருந்து
விடுதலை,
ஆரோக்கியமான
நல்ல
தூக்கம்,
மென்மையான
அழகான
சருமம்
பெறுதல்...
போன்ற
பல்வேறு
நன்மைகளும்
இந்த
சிகிச்சையால்
நமக்கு
கிடைக்கின்றன.
நவரக்கிழி
பல்வேறு
மருந்து
கலவை கொண்ட
துணிப்பை
மூலம்
உடலில்
ஒற்றடம்
கொடுத்து
சிகிச்சை
அளிக்கும்
முறையே
இது.
இதன்மூலம்
முழு
உடலும்
அல்லது
உடலின்
குறிப்பிட்ட
பகுதிகள்
வியர்க்க
வைக்கப்படுகின்றன.
இதன்
காரணமாக
உடலின்
இறக்கம்
குறைந்து
மூட்டுகளின்
விறைப்புத்தன்மை
நீங்குகிறது.
ரத்த
ஓட்டமும்
மேம்படுகிறது.
தேகம்
பொலிவு
பெறுகிறது.
அதிக
தூக்கத்தால்
உண்டாகும்
அசதியும்
விலகுவதோடு,
நரம்பு
சம்பந்தப்பட்ட
நோய்களும்
குணமாகின்றன.
நஸ்யம்
இது ஒரு
வித்தியாசமான
சிகிச்சை
முறை.
மூலிகைச்சாறையும்,
மருந்துகள்
கலந்த
எண்ணெயையும்
மூக்கின்
வழியே
விடுகிறார்கள்.
இதனால்
ரத்த
ஓட்டம்
மேம்பட்டு
உடல்
உறுப்புகளுக்கு
புது
தெம்பு
கிடைக்கிறது.
அத்துடன்,
பல்வேறு
நரம்புகளின்
நுனிகள்
தூண்டப்பட்டு
மைய நரம்பு
மண்டலம்
சுறுசுறுப்பாக
இயங்க
ஆரம்பிக்கிறது.
உத்வர்த்தனம்
இது மசாஜ்
முறையிலான
சிகிச்சை.
மருந்து
கலந்த
பவுடரை
உடலில்
தூவி மசாஜ்
செய்வார்கள்.
இதனால்
தோற்றம்
பொலிவு
பெறுவதோடு
உடலில்
உள்ள
தேவையற்ற
கொழுப்புகள்
அகற்றப்படுகிறது.
அதன்மூலம்
உடல் எடை
குறைகிறது.
மேலும்,
நல்ல
தூக்கம்
கிடைத்து
உடலும்
புத்துணர்வு
பெறுகிறது.
Thanks -
HTML http://www.muthukamalam.com/
*****************************************************
Page 1 of 1